என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறிப்பு
Byமாலை மலர்30 May 2020 11:07 AM GMT (Updated: 30 May 2020 11:07 AM GMT)
கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலி சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்குன்றம்:
செங்குன்றத்தை அடுத்த பொத்தூர் பாடசாலை தெருவைச் சேர்ந்தவர் பழனி (வயது 63). மீன் வியாபாரியான இவருடைய மனைவி மாரியம்மாள் (58). இவர்கள் இருவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் ஊத்துக்கோட்டையை அடுத்த மெய்யூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பினர்.
செங்குன்றத்தை அடுத்த அலமாதி பால்பண்ணை அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பழனியிடம் முகவரி கேட்பதுபோல் நடித்து பின்னால் அமர்ந்து இருந்த அவரது மனைவி மாரியம்மாளின் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதில் நிலைதடுமாறி கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். இதில் படுகாயம் அடைந்த மாரியம்மாள், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இதுபற்றி சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X