என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிமாநிலத்தில் இருந்து புதுவை வருவோரை 15 நாட்கள் தனிமைப்படுத்த உத்தரவு - நாராயணசாமி தகவல்
Byமாலை மலர்27 May 2020 9:56 AM GMT (Updated: 27 May 2020 9:56 AM GMT)
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை 15 நாள் தனிமைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தற்போது 33 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி 70 வயதை கடந்தவர்களை கொரோனா அதிகளவில் பாதிக்கிறது. வேறு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் இறக்கின்றனர்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை கண்டிப்பாக 15 நாள் தனிமைப்படுத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின் படி இன்னும் 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு புதுவைக்கு நிதி ஆதாரங்களை தரவில்லை. இதுகுறித்து பிரதமர், உள்துறை மற்றும் நிதி மந்திரிகளுக்கு கடிதம் எழுதி உள்ளேன். கொரோனாவை கட்டுக்குள் வைக்க மத்திய அரசு நமக்கு மருத்துவ உபகரணங்கள் கொடுக்க வேண்டும்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்கிட மத்திய அரசு தவறிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-
புதுவையில் தற்போது 33 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவரின் அறிவுரைப்படி 70 வயதை கடந்தவர்களை கொரோனா அதிகளவில் பாதிக்கிறது. வேறு நோய் உள்ளவர்கள் கொரோனா தொற்றால் இறக்கின்றனர்.
வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வருபவர்களை கண்டிப்பாக 15 நாள் தனிமைப்படுத்த மருத்துவ குழுவிற்கு உத்தரவிட்டுள்ளேன். மருத்துவர்கள் அறிவுரையின் படி இன்னும் 2 மாதங்களுக்கு கொரோனா தொற்று மிகப்பெரிய அளவில் பரவக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனாவை கட்டுப்படுத்த தேவையான மருந்துகளும், பொருளாதாரத்தை மீட்டெடுக்க மாநிலங்களுக்கு தேவையான நிதியை வழங்கிட மத்திய அரசு தவறிவிட்டது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X