search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சாலை விபத்து
    X
    சாலை விபத்து

    மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி

    துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் வந்த தனியார் நிறுவன ஊழியர் கார் மோதி பலியானார்
    குண்டடம்:

    ஈரோடு அருகே முத்தூர் மெயின் ரோடு சின்னியம்பாளையத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் விஜயகுமார்(வயது42), இவர் தனியார் விதை நிறுவனத்தில் விற்பனை பிரநிதியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று தாராபுரம் அருகே வரப்பாளையத்தில் தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் கொடுவாய் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    தாராபுரம் திருப்பூர் ரோட்டில் காதப்புள்ளபட்டி அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக விஜயகுமாரின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட விஜயகுமார் பலத்த காயமடைந்தார்.உடனடியாக அவரை மீட்டு தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சையளித்தும் பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து குண்டடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 
    Next Story
    ×