என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்
Byமாலை மலர்23 May 2020 2:17 PM GMT (Updated: 23 May 2020 2:17 PM GMT)
வேலூரில் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய சமூகநல அலுவலர்கள், அவர்களின் பெற்றோரை எச்சரித்தனர்.
வேலூர்:
வேலூர் மக்கான் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சமூகநல அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் 30 வயது வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டதும், சில நாட்களில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அலுவலர்கள், சிறுமி மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனைமீறி திருமணம் செய்து வைத்தால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று அலுவலர்கள் எச்சரித்தனர். மேலும் சிறுமிக்கும், வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று அவர்களின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக சிறுமி அரசு பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்படவில்லை.
வேலூர் மக்கான் பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக சமூக நலத்துறை அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் சமூகநல அலுவலர்கள் அங்கு சென்று விசாரித்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், ரேஷன் கடையில் பணிபுரியும் 30 வயது வாலிபருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமண நிச்சயம் செய்யப்பட்டதும், சில நாட்களில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததும் தெரிய வந்தது.
அதைத்தொடர்ந்து அலுவலர்கள், சிறுமி மற்றும் வாலிபரின் பெற்றோரை அழைத்து பேசி திருமணத்தை தடுத்து நிறுத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின்னரே திருமணம் செய்து வைக்க வேண்டும். இதனைமீறி திருமணம் செய்து வைத்தால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள் என்று அலுவலர்கள் எச்சரித்தனர். மேலும் சிறுமிக்கும், வாலிபருக்கும் திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று அவர்களின் பெற்றோரிடம் எழுதி வாங்கி கொண்டனர். கொரோனா தொற்று காரணமாக சிறுமி அரசு பிற்காப்பு இல்லத்தில் ஒப்படைக்கப்படவில்லை.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X