என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை திருட்டு
Byமாலை மலர்20 May 2020 12:47 PM GMT (Updated: 20 May 2020 12:47 PM GMT)
ராமநத்தம் அருகே விவசாயி வீட்டில் நகை திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம்:
ராமநத்தம் அடுத்துள்ள கல்லூர் ரோட்டை சேர்ந்தவர் பொற்கைபாண்டியன்(வயது 60). விவசாயி. இவர் தற்போது கல்லூர் அருகே மயிலாடும்புரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரவு நேரத்தில் மட்டும் கல்லூர் ரோட்டில் உள்ள தனது வீட்டில் வந்து பொற்கைபாண்டியன் தங்குவார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், இரவில் அவர் தங்குவதற்கு வரவில்லை. இதை பயன்படுத்தி வீட்டின் கதவை உடைத்து, 2½ பவுன் நகை, 300 கிராம் வெள்ளியை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. திருட்டு நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
ராமநத்தம் அடுத்துள்ள கல்லூர் ரோட்டை சேர்ந்தவர் பொற்கைபாண்டியன்(வயது 60). விவசாயி. இவர் தற்போது கல்லூர் அருகே மயிலாடும்புரத்தில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இரவு நேரத்தில் மட்டும் கல்லூர் ரோட்டில் உள்ள தனது வீட்டில் வந்து பொற்கைபாண்டியன் தங்குவார். நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், இரவில் அவர் தங்குவதற்கு வரவில்லை. இதை பயன்படுத்தி வீட்டின் கதவை உடைத்து, 2½ பவுன் நகை, 300 கிராம் வெள்ளியை திருடி சென்றுவிட்டனர். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அறிந்த ராமநத்தம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் கடலூரில் இருந்து மோப்பநாய் அர்ஜூன் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்தபடி சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றது. திருட்டு நடந்த வீட்டில் பதிவான கைரேகைகளை கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X