என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலி
Byமாலை மலர்20 May 2020 7:30 AM GMT (Updated: 20 May 2020 7:30 AM GMT)
காஞ்சிபுரத்தில் மின்சாரம் தாக்கி வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல் (வயது 50). சைக்கிளில் சென்று சமோசா, ஐஸ் வியாபாரம் செய்து வந்தார். சிங்காரவேல் பிள்ளையார்பாளையம் அருகே தாத்திமேடு என்ற இடத்தில் நகராட்சிக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில் குளிக்க செல்வது வழக்கம்.
அதே போல் நேற்று காலை குளிக்க சென்றார். நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்ததில், அந்த இடத்தில் மின்கம்பம் சாய்ந்து கிடந்தது. இதை கவனிக்காத சிங்காரவேல் தண்ணீர் தொட்டியில் தண்ணீர் விடுவதற்காக மோட்டார் சுவிட்ச்சை போட்டுள்ளார்.
அப்போது அவர் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மயங்கி கீழே விழுந்த அவரை, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். உயிரிழந்த சிங்காரவேலுக்கு தனலட்சுமி என்ற மனைவியும், கீதா என்ற மகளும் உள்ளனர்.
இதுகுறித்து பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X