search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரிய சடையம்பாளையம் குளம்
    X
    பெரிய சடையம்பாளையம் குளம்

    ஈரோட்டில் மழை- பெரிய சடையம்பாளையம் குளம் மீண்டும் நிரம்பியது

    ஈரோடு மாவட்டத்தில் பெய்த மழை காரணமாக பெரிய சடையம்பாளையம் குளம் மீண்டும் நிரம்பியது.
    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியிலும் ஓரளவு மிதமான மழை பெய்தது. நீண்ட நாட்களாக கடும் வெப்பத்தில் வாடிய மக்களுக்கு இந்த மழை சற்று இதமாக இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையில் சாலைகளில் தண்ணீர் ஓடியது. பள்ளங்களில் வெள்ளம் பெருக்கெடுத்தது. ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் நிரம்பிய பெரிய சடையம்பாளையம் குளம், பின்னர் வற்றத்தொடங்கியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெய்த மழையில் மீண்டும் நேற்று குளம் முழுமையாக நிரம்பி ரம்மியமாக காட்சி அளித்தது.

    இதுபோல் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை, கொல்லம்பாளையம் ஓடைகளிலும் வெள்ளம் அதிகமாக வந்தது. மிதமான இந்த மழையால் நிலத்தடி நீர் அதிகரிக்கும் என்று பொதுமக்கள் மகிழ்ந்து உள்ளனர்.
    Next Story
    ×