என் மலர்
செய்திகள்

கைது
மதுபாட்டில்களை எடுத்து சென்ற விவகாரம்- சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 போலீசார் கைதாகிறார்கள்
புதுவை திருக்கனூரில் பறிமுதல் செய்த மதுபாட்டில்களை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்காமல் எடுத்து சென்ற விவகாரம் தொடர்பாக சஸ்பெண்டு செய்யப்பட்ட 4 போலீசார் கைதாகிறார்கள்.
திருக்கனூர்:
புதுவை திருக்கனூர் எல்லையில் கடந்த 16-ந் தேதி இரவு ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் பிரசன்னா, வில்லியனூர் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வம் ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது அப்பகுதியில் விவசாய நிலத்தில் சிலர் மது அருந்துவதாக தகவல் கிடைத்து போலீசார் சோதனைக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் மது அருந்தியவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 15 பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவற்றை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் இதுகுறித்து நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சம்பவத்தன்று பணியிலிருந்த போலீஸ்காரர்கள் பிரசன்னா, செல்வம் ஆகியோரும் பணிமுடித்து சென்ற ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் கோகுலன், மணிகண்டன் ஆகியோருடன் சோதனைக்கு சென்றதும், அங்கு நடந்த சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்கு கூறாமல் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து மதுபாட்டில்களை எடுத்து சென்ற 4 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதின் பேரில் 4 போலீஸ்காரர்கள் மீதும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.
அதோடு தலைமறைவான 4 போலீஸ்காரர்களையும் கைது செய்ய சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று இரவு கூனிச்சம்பட்டு மற்றும் செட்டிப்பட்டு பகுதியில் தலைமறைவான போலீஸ்காரர்களின் வீடுகளில் சென்று தேடினர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. மேலும் மயிலம் பகுதியில் 4 போலீசாரும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அதிரடி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அங்கும் அவர்கள் இல்லை. தொடர்ந்து தலைமறைவான 4 போலீசாரையும் கைது செய்ய அதிரடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இன்று இரவுக்குள் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
புதுவை திருக்கனூர் எல்லையில் கடந்த 16-ந் தேதி இரவு ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் பிரசன்னா, வில்லியனூர் போக்குவரத்து போலீஸ்காரர் செல்வம் ஆகியோர் பணியில் இருந்தனர்.
அப்போது அப்பகுதியில் விவசாய நிலத்தில் சிலர் மது அருந்துவதாக தகவல் கிடைத்து போலீசார் சோதனைக்கு சென்றனர். போலீசாரை பார்த்ததும் மது அருந்தியவர்கள் மதுபாட்டில்களை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடி விட்டனர். இதையடுத்து அங்கிருந்த 15 பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். ஆனால் அவற்றை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கவில்லை என உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல்அல்வால் இதுகுறித்து நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
விசாரணையில் சம்பவத்தன்று பணியிலிருந்த போலீஸ்காரர்கள் பிரசன்னா, செல்வம் ஆகியோரும் பணிமுடித்து சென்ற ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர்கள் கோகுலன், மணிகண்டன் ஆகியோருடன் சோதனைக்கு சென்றதும், அங்கு நடந்த சம்பவங்களை உயர் அதிகாரிகளுக்கு கூறாமல் மதுபாட்டில்களை எடுத்துக் கொண்டதும் தெரியவந்தது.
இதனையடுத்து மதுபாட்டில்களை எடுத்து சென்ற 4 போலீஸ்காரர்கள் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டதின் பேரில் 4 போலீஸ்காரர்கள் மீதும் திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிட்லா சத்யநாராயணா, சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் வழக்கு பதிவு செய்தனர்.
அதோடு தலைமறைவான 4 போலீஸ்காரர்களையும் கைது செய்ய சிறப்பு அதிரடி படை இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் நேற்று இரவு கூனிச்சம்பட்டு மற்றும் செட்டிப்பட்டு பகுதியில் தலைமறைவான போலீஸ்காரர்களின் வீடுகளில் சென்று தேடினர். ஆனால் அங்கு அவர்கள் இல்லை. மேலும் மயிலம் பகுதியில் 4 போலீசாரும் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்து அதிரடி போலீசார் அங்கு சென்றனர். ஆனால் அங்கும் அவர்கள் இல்லை. தொடர்ந்து தலைமறைவான 4 போலீசாரையும் கைது செய்ய அதிரடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனால் இன்று இரவுக்குள் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.
Next Story






