search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மீட்கப்பட்ட குழந்தை
    X
    மீட்கப்பட்ட குழந்தை

    ஊட்டியில் கோவில் முன்பு வீசப்பட்ட குழந்தைக்கு தீவிர சிகிச்சை

    ஊட்டியில் கோவில் முன்பு வீசப்பட்ட ஆண் குழந்தையை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். அப்பகுதியில் பிரசவம் ஆன பெண்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஊட்டி:

    ஊட்டி கொல்லிமலை கிராமத்தில் உள்ளது காந்திபுதூர். இங்குள்ள மதுரைவீரன் கோவில் முன்பு நேற்று குழந்தையின் அழுகுரல் கேட்டது.

    சந்தேகம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் ஓடிச்சென்று பார்த்தனர். அங்கு பிறந்த சில நாட்களே ஆன ஆண் குழந்தை கிடந்தது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இது குறித்து கொலக்கொம்பை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.

    குளிரால் குழந்தை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக கம்பளி ஆடை போர்த்தப்பட்டிருந்தது. போலீசார் குழந்தையை மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை டாக்டர்கள் இன்குபேட்டரில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த குழந்தை பாதுகாப்பு நல அதிகாரிகள் குழந்தையை வீசி சென்ற தாய் யார்? என்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சமீபத்தில் குழந்தை வீசப்பட்ட பகுதியில் பிரசவம் ஆன பெண்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×