என் மலர்
செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்றவர்கள் கொரோனா பரிசோதனைசெய்ய வேண்டும்- பொதுமக்கள் தகவல் அளிக்கலாம்
வேலூர்:
வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர்.
கடந்த 2 நாட்களில் கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறிகள் கொண்டு சென்று வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் முன்னதாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்த விவசாயிகள் குறித்த விவரங்களை சுகாதார துறையினர் சேகரித்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளிலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு சென்ற விவசாயிகள், வியாபாரிகள் தாமாக முன்வந்து கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் அவர்களது குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதி பொதுமக்களுக்கும் பரவுவதை தடுக்க முடியும். கோயம்பேடு மார்க்கெட்டிற்கு சென்று வந்தவர்கள் யாராவது இருந்தால் அவர்கள் குறித்த விவரங்களையும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள கட்டுப்பாட்டு அறைகள், சுகாதாரத்துறை, தாசில்தார் அலுவலகங்களுக்கு பொதுமக்கள் தகவல் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டுசென்ற 22 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மேலும் 10 பேருக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






