என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    கொள்ளிடம் அருகே பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது

    கொள்ளிடம் அருகே பணம் வைத்து சூதாடிய 13 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கொள்ளிடம்:

    நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் நாகையில் இருந்து சிறப்பு தனிப்படை போலீசார் நேற்று மேற்கண்ட இடத்துக்கு விரைந்து சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடிக்கொண்டு இருந்தனர். உடனே போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர்கள் புத்தூரை சேர்ந்த கேசவன் (வயது 63), மன்சூர் (50), சீயாளம் கிராமத்தை சேர்ந்த குமார் (45), ஆனந்தகூத்தன் கிராமத்தை சேர்ந்த ராஜா (57), திருமயிலாடியை சேர்ந்த சுரேஷ் (50), மயிலாடுதுறையை சேர்ந்த சிவானந்தம் (48), ஆக்கூரை சேர்ந்த அப்துல்அலி (46), சீர்காழியை சேர்ந்த ரியாஸ் (33), கடலங்குடியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி (53), பொறையாறை சேர்ந்த பழனியப்பன்(56), நாகப்பட்டினத்தை சேர்ந்த சதீஷ்குமார்(48), விளந்திடசமுத்திரத்தை சேர்ந்த பாண்டியன்(32), சந்தப்படுகையை சேர்ந்த துரை(57) ஆகியோர் என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் இவர்கள் 13 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.56 ஆயிரத்து 80-ஐ பறிமுதல் செய்தனர்.
    Next Story
    ×