என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை
    X
    கொலை

    தந்தையை கத்தியால் குத்திக்கொன்ற இளம்பெண் - உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்

    கல்பாக்கம் அருகே பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த இளம் பெண் தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கத்தியால் குத்திக்கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார்.
    கல்பாக்கம்:

    கல்பாக்கம் அடுத்த வடபட்டினம் கிராமம் காட்டு காலனி பகுதியை சேர்ந்தவர் சேகர் (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஏகவள்ளி (38). இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது இரண்டாவது மகள் நந்தினி (19), அருணகிரி என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் நந்தினி தனது முதல் பிரசவத்துக்காக தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு வந்து இருந்தார்.

    இதற்கிடையே சேகருக்கும் அவரது மனைவி ஏகவள்ளிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலையில் சேகருக்கும் அவரது மனைவிக்கும் வழக்கம் போல் தகராறு ஏற்பட்டது.

    இதைக்கண்ட மகள் நந்தினி சேகரை கண்டித்துள்ளார். இதனால் சேகருக்கும், அவரது மகள் நந்தினிக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர்களுக்கு இடையே தகராறு முற்றியதில், நந்தினி அருகில் இருந்த காய்கறி நறுக்கும் கத்தியை எடுத்து திடீரென தனது தந்தை சேகரின் இடது மார்பில் குத்தியுள்ளார்.

    இதனால் நிலை குலைந்து ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த விழுந்த சேகரை, அருகில் உள்ளவர்கள் மீட்டு கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்த கல்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் சந்திரசேகர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை குத்திக்கொன்ற வழக்கில் மகள் நந்தினியை கைது செய்தனர். மேலும், இந்த கொலையில் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் ஏகவள்ளியும் கைது செய்யப்பட்டார். தாய், மகள் இருவரும் திருக்கழுக்குன்றம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    Next Story
    ×