என் மலர்
செய்திகள்

தீ விபத்து
வேதாரண்யம் அருகே தீ விபத்தில் மீனவர் குடிசை வீடு சேதம்
வேதாரண்யம் அருகே வீட்டில் பெண் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் குடிசை வீடு சேதம் ஆனது.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தில் மேலத்தெருவில் வசிப்பவர் பக்கிரிசாமி. இவரது மனைவி வேதவள்ளி (வயது 65). இவர் வீட்டில் சமையல் செய்தபோது எதிர்பாராதவிதமாக அடுப்பிலிருந்து தீ கூரை வீட்டில் பரவி தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அதிகாரி கந்தசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று மேலும் தீ பரவாமல் அணைத்தனர். சேத மதிப்பு ரொக்கம் உள்பட ரூபாய் ஒரு லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தாசில்தார் முருகு, மற்றும் வருவாய்த்துறையினர் நேரில் சென்று அரசின் நிவாரணத்தை வழங்கினர்.
Next Story






