என் மலர்
செய்திகள்

வேலூர் அம்மா உணவகத்தில் 3 வேளையும் இலவச உணவு- கேசி வீரமணி தொடங்கி வைத்தார்
வேலூர்:
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிவுரையின் படி வேலூர் அண்ணா சாலையில் உள்ள அம்மா உணவகத்தில் அ.தி.மு.க. மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவின் சார்பில் இலவசமாக பொதுமக்களுக்கு 3 வேளை உணவு வழங்கும் திட்டம் தொடங்க தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவிற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜனனீ சதீஷ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக வணிக வரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டுபொதுமக் களுக்கு உணவு மற்றும் முக கவசங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
மேலும் அம்மா உணவக பணியாளர்களுக்கு சுகாதாரமாக உணவகத்தை பராமரிக்க வேண்டும் என்றும் சுத்தமான உணவை கையுறை முகக் கவசங்கள் கொண்டு தயாரித்து வழங்கப்பட வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.
பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் முதல்வரின்அறிவுரைகளை பின்பற்றினால் கொரோனா எனும் இந்த கொடிய நோயை தமிழகத்தில் இருந்து விரட்ட முடியும். மேலும் வீட்டிலேயே இருந்து நோய் பரவாமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி கைகளை கழுவி சுத்தம் செய்ய வேண்டும் என்று கூறினார்.
நிகழ்ச்சியில் வேலூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு, பகுதி செயலாளர் நாகு, தகவல் தொழில்நுட்ப நிர்வாகி ராஜசேகர், பகுதி நிர்வாகிகள் முனுசாமி, மகேஸ்வரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தினமும் சுமார் 1500 நபர்கள் உணவருந்தும் வண்ணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என ஜனனீ சதீஷ்குமார் தெரிவித்தார்.






