என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா
    X
    கஞ்சா

    கஞ்சாவுக்கு மாறிய மது பிரியர்கள்- பொட்டலம் ரூ.300-க்கு விற்பனை

    ஊரடங்கு காரணமாக மதுக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் கஞ்சாவுக்கு மது பிரியர்கள் மாறியுள்ளனர். ஒரு பொட்டலம் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    ஊரடங்கு உத்தரவை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக மதுக்கடை, சாராயம், கள்ளுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. ஊரடங்கு தொடக்கமான முதல் 2 வாரத்தில் கள்ளச் சந்தையில் தாராளமாக மதுபாட்டில்கள் விற்கப்பட்டன. அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதால் மதுக்டைகள், குடோவுன்கள் சீல் வைக்கப்பட்டது. இதனால் 4 மடங்கு விலையில் மதுபாட்டில்கள் விற்பனையானது.

    போலீசார் அதிரடி நடவடிக்கையால் முற்றிலுமாக மது விற்பனை தடுக்கப்பட்டது. இதனால் கிராமப் பகுதிகளில் சாராயம் விற்பனை நடந்தது.

    பல இடங்களில் கடைகளை உடைத்து சாராயம் திருடப்பட்டது. ஒரு கட்டத்தில் போதைக்கு அடிமையானவர்கள் கிராமங்களுக்கு சென்று கள் அருந்த தொடங்கினர். புதுவையில் தென்னங்கள் அதிகளவில் கிடைக்கும். இந்த கள்ளை தோப்புகளுக்கு சென்று மதுபிரியர்கள் குடிக்க தொடங்கினர். இதுகுறித்து கவனத்திற்கு வந்தவுடன் போலீசார் கள்ளுப்பானைகளை உடைத்தனர்.

    இதனால் மது விற்பனை முழுமையாக தடுக்கப்பட்டது. இதனால் போதைக்கு அடிமை யானவர்கள் கஞ்சாவை நாட தொடங்கியுள்ளனர். ஒரு பொட்டலம் ரூ.50க்கு விற்கப்பட்ட கஞ்சா ரூ.300-க்கு விற்கப்படுகிறது. இருப்பினும் விலையை பொருட்படுத்தாமல் போதை பிரியர்கள் கஞ்சா, ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்களை நாடியுள்ளனர். இதேபால சிகரெட்டும் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×