என் மலர்
செய்திகள்

பயிர்சாகுபடியின்போது விவசாயிகள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்- வேளாண்துறை வெளியீடு
புதுச்சேரி:
ஊரடங்கிலிருந்து வேளாண் பணிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள் ளது.
இத்தகைய சூழலில் விவசாயிகளுக்கான வழிகாட்டுதல் அறிக்கையை மத்திய வேளாண் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து புதுவை விவசாயிகளுக்கு வேளாண்துளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாற்று நடுவது, காய்கறி அறுவடை செய்யும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அவர்களுக்கு கிருமிநாசினி வழங்க வேண்டும். வயல், தோட்டத்திலிருந்து வெளியேறும் போது கை, கால், முகத்தை சோப்பு உதவியுடன் கழுவ வேண்டும். பயிர் நடும் பணியில் அதிக தொழிலாளர்களை ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நிலத்த உழுவதற்கு டிராக்டரை பயன்படுத்த வேண்டும். உரம், பூச்சிக்கொல்லி தெளிப்பு பணிகளின்போது தொழிலாளர்கள் ஒரு மீட்டர் முதல் 2 மீட்டர் இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். காலியான பூச்சிக்கொல்லி பாக்கெட்டுகளை நிலத்தில் புதைக்கவோ, எரிக்கவோ வேண்டும். விதைகள் வைக்கப்பட்ட பைகளை 2 நாள் வெயிலில் வைத்த பிறகே பயன்படுத்த வேண்டும்.
வேளாண் பயிர்களை சேமிக்கும் முன்பு 48 மணி நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும். புதுவையில் அனைத்த வேளாண் விற்பனை நிலையங்களும் செயல்படும். இடுபொருள் விற்பனை நிலையங்களும் செயல்படும். எந்திரங்கள் வாடகை நிலையங்கள் விவசாயிகள் பயன்பாட்டிற்காக இயங்கும். மாநிலங்களுக்கு இடையில் எந்திரங்கள், விளை பொருட்கள், இடுபொருட்கள் எடுத்துச்செல்ல தடை தளர்த்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






