என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை- புதுவை அரசு அறிவிப்பு
Byமாலை மலர்1 April 2020 1:34 PM GMT (Updated: 1 April 2020 1:34 PM GMT)
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக விடுமுறை காலத்தின் போது தொழிலாளர்களுக்கு முழு சம்பளம் வழங்க புதுவை அரசு முடிவு செய்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசின் தொழிலாளர் துறை ஆணையாளர் வல்லவன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசின் உத்தரவினால் மூடப்பட்ட தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவன ஊழியர்களுக்கு விடுமுறை காலத்தை பணிக்காலமாக கருதி அவர்களுக்கு முழு சம்பளம் வழங்கிட அனைத்து தொழிற்சாலை மற்றும் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நலன் காக்கும் பொருட்டு அவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் ஏற்படுத்தி தர தொழில் முனைவோருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் எந்த சூழ்நிலையிலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய தங்குமிடத்தில் இருந்து வெளியேற அனுமதி கிடையாது. அவர்களுக்கு உடல்நலம் மற்றும் உடலில் பிரச்சனை ஏற்பட்டால் நிர்வாகத்தினர் உடனடியாக மாவட்ட கலெக்டரை அணுகி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X