என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாட்ஸ் அப்பில் கொரோனா வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர் குண்டர் சட்டத்தில் கைது
Byமாலை மலர்29 March 2020 7:50 AM GMT (Updated: 29 March 2020 7:50 AM GMT)
வாட்ஸ் அப்பில் கொரோனா வதந்தி பரப்பிய கல்லூரி மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் கல்லூரி மாணவர்கள் 2 பேரை குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
டி.என்.பாளையம்:
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினார்கள். இது குறித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 17 வயது மற்றும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
கைதான 17 வயது மாணவர் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கூடத்திலும், 19 வயது மாணவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 19 வயது மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் டி.என். பாளையம் பகுதியில் 24 பேருக்கு கொரோனா பரவி உள்ளதாக அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பினார்கள். இது குறித்த புகாரின் பேரில் பங்களாபுதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 17 வயது மற்றும் 19 வயது கல்லூரி மாணவர்கள் 2 பேரை கைது செய்தனர்.
கைதான 17 வயது மாணவர் கோவையில் உள்ள சீர்திருத்த பள்ளிக்கூடத்திலும், 19 வயது மாணவர் கோபியில் உள்ள மாவட்ட சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் 19 வயது மாணவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் கதிரவனுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் 19 வயது மாணவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X