என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
ஊரடங்கு தடையை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றிய 47 பேர் மீது வழக்கு
ஊரடங்கு தடையை மீறி காரணமில்லாமல் மோட்டார் சைக்கிளில் சுற்றிய 47 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி காரணமின்றி பல இளைஞர்கள் புதுவை நகரை மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். போலீஸ் எச்சரிக்கை செய்தும் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றதால் 47 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல் தடையை மீறி கடைகள் வைத்து காய்கறிகள் விற்ற 5 பேர் மீதும், கோழி இறைச்சி விற்ற ஒருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் பொருட்டு புதுவையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஊரடங்கு உத்தரவை மீறி காரணமின்றி பல இளைஞர்கள் புதுவை நகரை மோட்டார் சைக்கிளில் வலம் வந்தனர். போலீஸ் எச்சரிக்கை செய்தும் அதனை பொருட்படுத்தாமல் மோட்டார் சைக்கிளில் செல்ல முயன்றதால் 47 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
இதேபோல் தடையை மீறி கடைகள் வைத்து காய்கறிகள் விற்ற 5 பேர் மீதும், கோழி இறைச்சி விற்ற ஒருவர் மீதும் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
Next Story






