search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முருகன்-நளினி
    X
    முருகன்-நளினி

    வேலூர் ஜெயிலில் நளினி- முருகன் சந்திக்க தடை

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கைதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த நளினி முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
    வேலூர்:

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளை வருகிற 31-ந் தேதி வரை உறவினர்கள் மற்றும் அவர்கள் வக்கீல்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவரது கணவர் முருகன் ஆகியோர் கோர்ட்டு உத்தரவுப்படி 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து வருகின்றனர்.

    அதன்படி வேலூர் பெண்கள் ஜெயிலில் இன்று காலை நளினி முருகன் சந்திப்பு நடைபெற இருந்தது.

    கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக கைதிகளை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் இன்று நடைபெற இருந்த நளினி முருகன் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.
    Next Story
    ×