என் மலர்
செய்திகள்

நாராயணசாமி
புதுவையில் நாளை பஸ்கள் ஓடாது- நாராயணசாமி அறிவிப்பு
புதுவையில் நாளை அரசு மற்றும் தனியார் பஸ்கள் ஓடாது என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி:
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் ஊரடங்கு நேரத்தில் புதுவை மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி, விமானம், ராணுவம் உள்ளிட்ட பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதை தவிர்க்கவும். அறுவை சிகிச்சைக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் முடிந்தவரை தள்ளி வைக்கவும். வீட்டு பணியாளர்கள், டிரைவர்கள், தோட்ட பணியாளர்கள், பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக்கூடாது. பதட்டத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்.
நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கிற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாளை ஓடாது. புதுவை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து கொரோனாவை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்றும் 93453 75069 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் குறைகள், கோரிக்கைகளை மக்கள் வருகிற 31-ந் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாளை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாலும், கடைகள் அடைக்கப்படுவதாலும் மற்றும் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோக்களும், டெம்போக்களும் இயங்காது என கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் நாளை மக்கள் ஊரடங்கிற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
மக்கள் ஊரடங்கு நேரத்தில் புதுவை மக்கள் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள், வழிகாட்டுதல்கள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மிகவும் அத்தியாவசிய பணிகளை தவிர பிற பணிகளுக்கு வீட்டை விட்டு வெளியே செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது.
நாளை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் தாமாக முன்வந்து ஊரடங்கு உத்தரவை பின்பற்ற வேண்டும். கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவம் சார்ந்த பணியாளர்கள், உள்ளாட்சி, விமானம், ராணுவம் உள்ளிட்ட பிற துறை பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மணியோசை மூலமும், கைதட்டியும் நன்றி தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
சாதாரண மருத்துவ சிகிச்சைக்கு மருத்துவமனை செல்வதை தவிர்க்கவும். அறுவை சிகிச்சைக்கு தேதி நிர்ணயிக்கப்பட்டிருந்தால் முடிந்தவரை தள்ளி வைக்கவும். வீட்டு பணியாளர்கள், டிரைவர்கள், தோட்ட பணியாளர்கள், பிற பணியாளர்களுக்கு சம்பளத்தை நிறுத்தக்கூடாது. பதட்டத்துடன் பொருட்கள் வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும். வதந்திகளை நம்ப வேண்டாம்.
நாளை மறுநாள் (திங்கட் கிழமை) முதல் அரசு ஊழியர்கள் சுழற்சி முறையில் பணியாற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மக்கள் ஊரடங்கிற்கு வணிகர்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.
அரசு மற்றும் தனியார் பஸ்கள் நாளை ஓடாது. புதுவை அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து கொரோனாவை வெற்றிகரமாக ஒழிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க முதல்-அமைச்சர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் நேரில் வரவேண்டாம் என்றும் 93453 75069 என்ற எண்ணிற்கு வாட்ஸ்-அப் மூலம் குறைகள், கோரிக்கைகளை மக்கள் வருகிற 31-ந் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் முதல்-அமைச்சர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நாளை ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதாலும், கடைகள் அடைக்கப்படுவதாலும் மற்றும் பஸ்கள் ஓடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோக்களும், டெம்போக்களும் இயங்காது என கூறப்படுகிறது.
Next Story






