search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஞ்சா
    X
    கஞ்சா

    மணல்மேல்குடியில் வீட்டில் பதுக்கிய 65 கிலோ கஞ்சா பறிமுதல்

    மணல்மேல்குடியில் வீட்டில் பதுக்கிய 65 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அறந்தாங்கி:

    மணமேல்குடியை அடுத்த யாக்கூப் ஹசன்  பேட்டையைச் சேர்ந்தவர் ஜமால் முகமது. இவர் தஞ்சாவூர் மாவட்டம் பேரா வூரணியில் மளிகை கடை நடத்தி வருகிறார். மேலும் அங்கு குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். சொந்த ஊருக்கு விஷேச நாட்களில் மட்டுமே ஜமால் முகமது தனது குடும்பத்தினருடன் வந்து செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். இதனால் யாக்கூப் ஹசன் பேட்டையில் உள்ள ஜமால் முகமதுவின் வீடு எப்போதும் பூட்டியே கிடக்கும். இந்நிலையில் ஜமால் முகமதுவின் உறவினர் ஒருவர் ஜமால் முகமதுவின் வீட்டை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது வீட்டின் உள்ளே மாடிப்படிக்கு கீழே சில மூட்டைகள் கிடந்துள்ளது. அதை அவர் எடுத்து பார்த்தபோது அதில் கஞ்சா இருந்துள்ளது. உடனே அவர் இது குறித்து ஜெகதாபட்டினம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். 

    தகவலின் பேரில் கோட்டைப்பட்டினம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்த போது அங்கு 65 கிலோ கஞ்சா மூடைகளில் இருந்துள்ளது. இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கஞ்சாவை பதுக்கியது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×