என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேதாரண்யம் அருகே முதியவர் தற்கொலை
Byமாலை மலர்17 March 2020 9:53 AM GMT (Updated: 17 March 2020 9:53 AM GMT)
வேதாரண்யம் அருகே விஷம் குடித்து முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யத்தை அடுத்த செம்போடை வடக்கு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 60). இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று உடல்நலம் அதிகமாகபாதிக்கப்பட்டதால் வீட்டில் மாமரத்திற்கு தெளிக்க பயன்படும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த கோவிந்தசாமியை அருகில் இருந்தவர்கள் கடந்த 13-ந் தேதி அன்று வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி இறந்துவிட்டார்.
இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமரன், மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X