search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தர்பூசணி
    X
    தர்பூசணி

    தர்பூசணி விலை சரிவு- விவசாயிகள் கவலை

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிமாநில பகுதிகளுக்கு தர்பூசணி எடுத்து செல்வது தடைபட்டுள்ளதால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உருவாகி உள்ளது.
    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், கல்பாக்கம், எச்சூர், வள்ளிபுரம், கூவத்தூர், பட்டிக்காடு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கோடை கால அறுவடையாக தர்பூசணி பயிரிட்டிருந்தனர்.

    கொரோனா வைரஸ் பீதி காரணமாக வெளிமாநில பகுதிகளுக்கு பழம் எடுத்து செல்வது தடைபட்டுள்ளது. சென்னை பகுதியில் மட்டுமே விற்பனை செய்யும் சூழல் ஏற்பட்டு உள்ளதால் குறித்த காலத்தில் அறுவடை செய்யாத நிலை ஏற்பட்டுள்ளது. செடிகளிலேயே தர்பூசணி அழுகி வருகின்றது.

    இதனால் விவசாயிகள் நஷ்டம் அடையும் நிலை உருவாகி உள்ளது. ஒரு டன் தர்பூசணி 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆகும். ஆனால் தற்போது ரூ.20 ஆயிரத்து விற்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.

    Next Story
    ×