என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜாபாத் அருகே கார் கவிழ்ந்து ஒப்பந்ததாரர் பலி
Byமாலை மலர்15 March 2020 6:08 PM GMT (Updated: 15 March 2020 6:08 PM GMT)
வாலாஜாபாத் அருகே கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒப்பந்ததாரர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாலாஜாபாத்,
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுந்தர்ராமன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர் தனது நண்பரான செங்கல்பட்டு முல்லை நகரை சேர்ந்த கோகுல் ஆனந்தம் (57) என்பவரின் காரில் பணி நிமித்தமாக காஞ்சீபுரம் சென்று விட்டு மீண்டும் வாலாஜாபாத் வழியாக மதுராந்தகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.
காரை கோகுல் ஆனந்த் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த செல்வம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல் ஆனந்தம் காயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த கோகுல் ஆனந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் சுந்தர்ராமன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 62). பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர். இவர் தனது நண்பரான செங்கல்பட்டு முல்லை நகரை சேர்ந்த கோகுல் ஆனந்தம் (57) என்பவரின் காரில் பணி நிமித்தமாக காஞ்சீபுரம் சென்று விட்டு மீண்டும் வாலாஜாபாத் வழியாக மதுராந்தகத்துக்கு திரும்பி கொண்டிருந்தார்.
காரை கோகுல் ஆனந்த் ஓட்டிச் சென்றார். இந்த நிலையில் வாலாஜாபாத் அருகே புளியம்பாக்கம் பகுதியில் கார் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் இருந்த செல்வம் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கோகுல் ஆனந்தம் காயம் அடைந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த வாலாஜாபாத் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயம் அடைந்த கோகுல் ஆனந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்வத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வாலாஜாபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X