என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குத்தாலம் அருகே வீட்டின் மேற்கூரையை பிரித்து நகை-பணம் கொள்ளை
குத்தாலம்:
நாகை மாவட்டம் குத்தாலம் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி கண்ணன் (வயது 44).
இந்த கிராமத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட நகரில் இடம் வாங்கி கூறைவீடு கட்டி இவரும், இவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளும் வசித்து வருகின்றனர். புதிதாக உருவாகிய நகர் என்பதால் இப்பகுதிக்கு இன்னமும் மின் இணைப்பு வழங்கப்படவில்லை. மேலும் இப்பகுதியில் ஆள் நடமாட்டமும் மிகக் குறைவு.
தனது வீட்டில் சோலார் மூலம் மின்வசதி ஏற்படுத்தியிருந்த விவசாயி கண்ணன், சோலார் மின்சக்தி இன்றி விளக்குகள் மற்றும் மின்விசிறி அணைந்ததால், வீட்டை பூட்டிவிட்டு, தனது குடும்பத்தினருடன் வீட்டு வாசலில் படுத்து உள்ளனர்.
இந்நிலையில், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாதததைப் பயன்படுத்தி மர்மநபர்கள், கண்ணனின் வீட்டு பின்பக்கம் வழியாக கூரைமேல் ஏறி, கூறையைப் பிரித்து வீட்டுக்குள் இறங்கி, அவர் வீட்டில் வைத்திருந்த 9 பவுன் நகை மற்றும் ரூ.3 லட்சம் ரொக்கப்பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து, பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்