search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மரணம்
    X
    மரணம்

    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

    மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி கல்லூரி மாணவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாமல்லபுரம்:

    தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர் சைலேஷ் வரராவ் (20). தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பிடெக் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.

    மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்த போது நண்பர்களுடன் கடற்கரை கோவில் அருகே கடலில் குளித்தார். அப்போது ராட்சத அலையில் சிக்கி சைலேஷ் வரராவ் பரிதாபமாக உயிரிழந்தார்,

    மாமல்லபுரம் அடுத்த பையனூரை சேர்ந்தவர் பிரகாஷ் (24) ரிசார்ட் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இரவு வேலை முடிந்து வீடு செல்லும் போது பூச்சேரி டோல்கேட் அருகே நிறுத்தி வைத்தப்பட்டிருந்த லாரி அருகே படுத்து தூங்கினார். அப்போது டிரைவர் லாரியை எடுத்த போது பிரகாஷ் டயரில் சிக்கி உடல் நடங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×