என் மலர்
செய்திகள்

அரியூர் அருகே தந்தை திட்டியதால் மெக்கானிக் தற்கொலை
வேலூர்:
அரியூர் அருகே உள்ள புலிமேடு கிராமம் கொல்லைமேடு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (வயது21) மெக்கானிக் வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் அந்த பகுதியில் நடந்த மாடு விடும் விழாவிற்கு சென்று விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்தார்.
இதனை கண்டித்து அவரது தந்தை திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த ரஞ்சித்குமார் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை எடுத்துக் கொண்டு அருகிலிருந்த பூந்தோப்புக்கு சென்று பூச்சி மருந்தை குடித்து விட்டார்.
மேலும் இது குறித்து அவருடைய நண்பருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவரது நண்பர் சம்பவ இடத்திற்கு சென்று ரஞ்சித்குமாரை மீட்டு அரியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ரஞ்சித்குமார் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






