என் மலர்
செய்திகள்

ஈரோட்டில் சிறுமிகளின் ஆபாச படங்களை பேஸ்புக்கில் பதிவிட்ட ஓட்டல் உரிமையாளர் கைது
ஈரோடு:
ஈரோடு பாப்பாத்தி காடு பகுதியை சேர்ந்தவர் செல்வக்குமார். இவரது மகன் யோகேஷ்வன் (35). திருமணமாகாதவர். இவர் ஈரோடு மேட்டூர் ரோட்டில் ஓட்டல் நடத்தி வருகிறார்.
இவரது பேஸ்புக் கணக்கில் சிறுமிகளின் ஆபாச படங்கள் மற்றும் பாலியல் உணர்வுகளை தூண்டும் விதத்தில் போட்டோ மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசாருக்கு புகார் வந்தது. அதன் பேரில் போலீசார் யோகேஷ்வரன் செல்போனை சோதனை செய்த போது அவர் பேஸ்புக் கணக்கை பாலியல் நோக்கத்துக்காக தவறான முறையில் பயன்படுத்தியதும், குழந்தைகளை பாலியல் கற்றலுக்கு தூண்டும் வகையிலும் பயன்படுத்தி சமூக சீர்கேட்டிற்கு காரணமாக இருந்ததும் தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து வீரப்பன் சத்திரம் போலீசார் யோகேஷ்வரன் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் (ஐ.டி) உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
பேக்புக் பக்கத்தில் சிறுமிகளின் ஆபாச படங்களை பதிவிட்டதாக ஈரோட்டில் ஒருவர் கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்று போலீசார் தெரிவித்தனர்.






