என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தி.மு.க. எம்.பி. கதிர் ஆனந்த் குடிநீர் ஆலைக்கு ‘சீல்’
Byமாலை மலர்3 March 2020 2:19 AM GMT (Updated: 3 March 2020 8:19 AM GMT)
நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாததால் தி.மு.க. எம்.பி. கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வேலூர் :
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து ‘சீல்’ வைத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற்றிருப்பதும், 37 ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து உரிமம் பெறாத 37 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளை மூடி ‘சீல்’ வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் 29 குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று மீதமுள்ள 8 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி அருகே உள்ள உள்ளிப்புதூரில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்தது. அந்த ஆலை ஆழ்துளை கிணறுக்கு வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து மீதமுள்ள 7 ஆலைகளின் குடிநீர் கிணறுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் இல்லாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை மூடி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அதிகாரிகள் உரிமம் இல்லாத மற்றும் உரிமத்தை புதுப்பிக்காத தனியார் குடிநீர் ஆலைகளை கண்டுபிடித்து ‘சீல்’ வைத்து வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3 ஆலைகள் மட்டுமே நிலத்தடி நீர் எடுப்பதற்கான உரிமம் பெற்றிருப்பதும், 37 ஆலைகள் உரிமம் பெறாமல் இயங்கி வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து உரிமம் பெறாத 37 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுகளை மூடி ‘சீல்’ வைக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் 29 குடிநீர் ஆலைகளில் உள்ள ஆழ்துளை கிணறுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நாளாக நேற்று மீதமுள்ள 8 குடிநீர் ஆலைகளின் ஆழ்துளை கிணறுக்கு அதிகாரிகள் சீல் வைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி அருகே உள்ள உள்ளிப்புதூரில் இயங்கி வரும் முன்னாள் அமைச்சர் துரைமுருகன் மகனும், தி.மு.க. எம்.பி.யுமான கதிர்ஆனந்துக்கு சொந்தமான குடிநீர் ஆலை நிலத்தடி நீர் எடுக்க அனுமதி பெறாதது தெரிய வந்தது. அந்த ஆலை ஆழ்துளை கிணறுக்கு வருவாய்துறையினர், பொதுப்பணித்துறையினர் சீல் வைத்தனர். தொடர்ந்து மீதமுள்ள 7 ஆலைகளின் குடிநீர் கிணறுகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X