என் மலர்
செய்திகள்

சாலை மறியல்
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
அரக்கோணம் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே நாகவேடு கிராமத்தில் கடந்த 6 மாதமாக சரிவர தண்ணீர் வரவில்லை. இதனால் நேற்று நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அரக்கோணம் நெமிலி சாலையில் மறியல் செய்தனர்.
சம்பவ இடத்திற்கு நெமிலி தாசில்தார் சுரேஷ், சவுந்தர்ராஜன், தாலுகா போலீஸ், அரக்கோணம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசங்கரன், மற்றும் போலீசார் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று சாலை மறியல் செய்தவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை செய்தனர்.
உடனடியாக தண்ணீர் வருவதற்கு ஏற்பாடு செய்வதாக கூறி இதன்பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story






