search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாஜக
    X
    பாஜக

    வேலூரில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பா.ஜ.க. பேரணி

    திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக வேலூரில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூரில் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. வேலூர் மாவட்ட பா.ஜ.க சார்பில் குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் எதிர்க்கட்சிகளின் பொய் பிரசாரத்தை கண்டித்தும் பேரணி நடந்தது.

    வேலூர் காகிதப்பட்டறை திரவுபதி அம்மன் கோவில் திடலில் இருந்து பேரணி தொடங்கியது. வேலூர் மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார்.

    மாநில பொதுச்செயலாளர் பொன் பால கணபதி பேரணியை தொடங்கி வைத்தார். மாவட்ட துணை தலைவர் ஜெகன்நாதன், பாபு, பாஸ்கர், பொருளாளர் மனோகரன் மாவட்ட செயலாளர்கள் ஏழுமலை, சரவணகுமார், மண்டல தலைவர் ஜெகன்மோகன், சீனிவாசன், கமல விநாயகம், நந்தகுமார் உள்பட 500க்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

    Next Story
    ×