search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வீடு புகுந்து கொள்ளை
    X
    வீடு புகுந்து கொள்ளை

    சீர்காழி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளை

    சீர்காழி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் கதவை உடைத்து நகை-பணம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள விளந்திடசமுதிரம் ஜெயேந்திரர் நகரை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது.

    இதையொட்டி உறவினர்களுக்கு திருமண பத்திரிக்கை கொடுத்து, திருமண வேலைகளை ராஜதுரை மற்றும் அவரது குடும்பத்தினர் பார்த்து வந்தனர். இந்த நிலையில் பெங்களூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு பத்திரிக்கை கொடுப்பதற்காக வீட்டை பூட்டிவிட்டு ராஜதுரை சென்றார்.

    இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவில் அங்கு வந்தனர். வீட்டின் பின்பக்க கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்து அதில் இருந்த 8½ பவுன் நகை மற்றும் 1½ லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் வேறு எங்காவது பணம், நகை உள்ளதா? என பார்த்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இந்த நிலையில் பெங்களூரில் இருந்து இன்று காலை வந்த ராஜதுரை வீடு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் புகுந்து கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து அவர் சீர்காழி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரித்தனர். வீட்டில் பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். மேலும் கொள்ளையர்கள் விட்டு சென்ற கடப்பாறையை கைப்பற்றினர்.

    இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×