search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    வேதாரண்யம் அருகே சாராயம் விற்பனை செய்த இருவர் கைது

    வேதாரண்யம் அருகே அவரிக்காடு தோப்பு பகுதியில் மறைமுகமாக சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வேதாரண்யம்:

    வேதாரண்யம் டி.எஸ்.பி. சபியுல்லா உத்தரவின் பேரில் வேட்டைக் காரனிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையில் போலிசார் அவரிக்காடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அவரிக்காடு பகுதியில் தோப்பு பகுதியில் மறைமுகமாக சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த நபர்களை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் அவரிக்காடு சேர்ந்த வீரபத்திரன் (வயது 48) செந்தில்குமார் (41) என்பதும் தெரியவந்தது. அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த புதுச்சேரி சாராயம் 110 லிட்டரை கைப்பற்றி அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து வேதாரண்யம் கோர்ட்டில் ஆஜர் செய்தனர்.
    Next Story
    ×