என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேலூரில் டாக்டர் தம்பதி வீட்டில் 16 பவுன் நகை திருட்டு
வேலூர்:
வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்து வருபவர் லினு குருவில்லா (வயது 38). இவருடைய மனைவி ஜோமோல்சாராஜான் (35) அதே மருத்துவ மனையில் குழந்தை நலசிறப்பு டாக்டராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் இருவரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இவர்கள் வீட்டில் வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ராஜி மனைவி காயத்ரி (24) சமையல் வேலை செய்து வந்தார்.
டாக்டர் தம்பதியினர் வேலைக்கு செல்லும்போது வீட்டு சாவியை காயத்ரியிடம் கொடுத்துவிட்டு செல்வதும், காயத்ரி சமையல் வேலையை முடித்து விட்டு பக்கத்து வீட்டில் சாவி ஒப்படைத்துச் செல்வதும் வழக்கம், கணவன், மனைவி இருவரில் வேலை முடித்து முதலில் வரும் நபர் வீட்டு சாவியை வாங்கி கொள்வார்கள்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே மருத்துவமனை வளாகத்தில் உள்ள மற்றொரு குடியிருப்பில் வீட்டு வேலை செய்யும் சைதாப்பேட்டையை சேர்ந்த ரவிவர்மா மனைவி சவுந்தர்யாவை (25) வீட்டு வேலை உதவிக்காக காயத்ரி அழைத்து வந்துள்ளார். அதைத்தொடர்ந்து அவ்வப்போது சவுந்தர்யா டாக்டர் தம்பதியினரின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 20-ந் தேதி வேலை முடிந்து வீடு திரும்பிய ஜோமோல் சாராஜான், அவரின் பர்சில் வைத்திருந்த 4 தங்கவளையல்கள், செயின், கம்மல் உள்பட 16 பவுன் நகைகள் திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், காயத்ரியிடம் கேட்டதற்கு சரிவரப் பதில் கூறவில்லை.
இந்த திருட்டு சம்பவம் குறித்து ஜோமோல் சாராஜான் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து காயத்ரியிடம் தீவிர விசாரணை மேற் கொண்டனர். அதில், காயத்ரி, சவுந்தர்யா ஆகியோர் சேர்ந்து நகையை திருடியதும், அவற்றில் சில நகைகளை ஒரு அடகுக்கடையில் வைத்து பணம் பெற்றதும் தெரிய வந்தது.
இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 8½ பவுன் நகை, நகையை அடகுவைத்து பெற்ற ரூ.1லட்சம் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. 2 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்