என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மானாமதுரையில் மணல் திருட்டை தடுக்க வலியுறுத்தி போராட்டம் நாளை நடக்கிறது
மானாமதுரை:
மானாமதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியக்குழு அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் தி.க. மாவட்ட செயலாளர் ஆனந்தவேல் தலைமையில் நடந்தது.
தி.மு.க. நகர் செயலாளர் பொன்னுச்சாமி, இளைஞரணி செயலாளர் சுந்தர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஆண்டி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வீரையா, முனியராஜ், ராஜாராமன், முருகானந்தம்.
ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அசோகன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர் செயலாளர் நாகராஜன், காங்கிரஸ் கட்சி தலைவர் பழனிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் மாணிக்கம், நகர் செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பபெற வேண்டும், மானாமதுரை வைகை ஆற்றில் தொடர் மணல் திருட்டு நடந்து வருகிறது. இந்த வைகை ஆற்றில்தான் குடிதண்ணீர் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து அனுப்பப்படுகிறது.
ஒரு நாளைக்கு ஒரு கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. குடிதண்ணீருக்கு ஆதாரமாக உள்ள வைகையில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதனை வலியுறுத்தி நாளை (25-ந்தேதி) பேரூராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்