என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய கல்லூரி மாணவருக்கு கொரோனா?
Byமாலை மலர்24 Feb 2020 8:52 AM GMT (Updated: 24 Feb 2020 8:52 AM GMT)
சீனாவில் இருந்து பெருந்துறை திரும்பிய கல்லூரி மாணவருக்கு சளி, காய்ச்சல் உள்ளதால் அவரது ரத்தப்பரிசோதனை முடிவு தெரியும் வரை தனி அறையில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் உள்ள சின்ஜியங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சீனாவிலிருந்து பெருந்துறைக்கு அந்த வாலிபர் திரும்பினார். வீட்டில் இருந்து வந்த அந்த வாலிபருக்கு திடீரென சளி, காய்ச்சல் அதிகமானது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபர் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபரின் ரத்த மாதிரியை எடுத்து அதை சென்னையில் உள்ள கொரோனா வைரஸ் செல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சோதனை முடிவு தெரியும் வரை தனி வார்டில் இருக்க வேண்டுமென அந்த வாலிபருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தனி வார்டில் இருந்த அந்த வாலிபர் திடீரென வீட்டுக்கு சென்று விட்டார்
இதனையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று ரத்தப் பரிசோதனை முடிவு தெரியும் வரை வீட்டில் தனி அறையில் இருப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வசித்து வரும் வாலிபர் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக சீனாவில் உள்ள சின்ஜியங் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 15-ந் தேதி சீனாவிலிருந்து பெருந்துறைக்கு அந்த வாலிபர் திரும்பினார். வீட்டில் இருந்து வந்த அந்த வாலிபருக்கு திடீரென சளி, காய்ச்சல் அதிகமானது. இதனால் கொரோனா வைரஸ் தாக்கி இருக்குமோ? என்ற சந்தேகத்தின் பேரில் அந்த வாலிபர் பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார்.
இதையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபரின் ரத்த மாதிரியை எடுத்து அதை சென்னையில் உள்ள கொரோனா வைரஸ் செல்லுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சோதனை முடிவு தெரியும் வரை தனி வார்டில் இருக்க வேண்டுமென அந்த வாலிபருக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில் தனி வார்டில் இருந்த அந்த வாலிபர் திடீரென வீட்டுக்கு சென்று விட்டார்
இதனையடுத்து மருத்துவர்கள் அந்த வாலிபர் வீட்டிற்கு சென்று ரத்தப் பரிசோதனை முடிவு தெரியும் வரை வீட்டில் தனி அறையில் இருப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X