search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஈவிகேஎஸ் இளங்கோவன்
    X
    ஈவிகேஎஸ் இளங்கோவன்

    ஈரோட்டில் இளங்கோவன் நாளை ஆர்ப்பாட்டம்

    கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஈரோட்டில் நாளை காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. இதில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொள்கிறார்.

    ஈரோடு:

    கேஸ் சிலிண்டர் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. இதனால் பெண்கள் அதிர்ச்சி அடைந்தனர் குறிப் பாக ஏழை நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கேஸ் சிலிண்டர் விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது.

    இந்நிலையில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைவர் சோனியா காந்தி அறிவித்திருந்தார்.

    தமிழ்நாடு முழுவதும் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அவித்திருந்தார். அதன்படி ஈரோடு மாநகர் மாவட்டம் மற்றும் வடக்கு மாவட்டம் காங்கிரஸ் சார்பில் நாளை (செவ்வாய்க் கிழமை) காலை 10 மணிக்கு சூரம்பட்டி நால்ரோடு பகுதியில் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈ.பி.ரவி தலைமை தாங்குகிறார். வடக்கு மாவட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகிக்கிறார். இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் மத்திய மந்திரியும், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார்.

    Next Story
    ×