என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்த நகை வியாபாரிகள் ரூ.5 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்17 Feb 2020 12:22 PM GMT (Updated: 17 Feb 2020 12:22 PM GMT)
குடியாத்தம் நகரில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நகை வியாபாரிகள் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல்துறை சார்பில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளது இதற்காக பல்வேறு வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , பல்வேறு சங்கங்கள் , பொதுமக்கள் , சமூக அமைப்புகளிடம் இருந்து நிதிகளை காவல்துறையினர் பெற்று வருகின்றனர்.
குடியாத்தம் நகை அடகு வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சதாசிவன் தலைமை தாங்கினார். சங்க கவுரவ தலைவர்கள் ஜெயந்திலால் ஜெயின், மோகனவேல், சங்க ஆலோசகர் குணசேகரன், பொருளாளர் சுசில், செயற்குழு உறுப்பினர்கள் குமரன், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மஞ்சுநாத் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நிதியாக குடியாத்தம் நகை அடகு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறை அதிகாரிகளிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காவல்துறையினர், நகை அடகு வியாபாரிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் நகரில் குற்றச் சம்பவங்களைத் தடுக்க கண்காணிப்பு கேமராக்களை பொருத்த காவல்துறை சார்பில் 150 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த உள்ளது இதற்காக பல்வேறு வியாபார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் , பல்வேறு சங்கங்கள் , பொதுமக்கள் , சமூக அமைப்புகளிடம் இருந்து நிதிகளை காவல்துறையினர் பெற்று வருகின்றனர்.
குடியாத்தம் நகை அடகு வியாபாரிகள் சங்கம் சார்பில் கண்காணிப்பு கேமராக்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் தலைவர் சதாசிவன் தலைமை தாங்கினார். சங்க கவுரவ தலைவர்கள் ஜெயந்திலால் ஜெயின், மோகனவேல், சங்க ஆலோசகர் குணசேகரன், பொருளாளர் சுசில், செயற்குழு உறுப்பினர்கள் குமரன், கமல்ஹாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் மஞ்சுநாத் வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் குடியாத்தம் நகரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதற்கு நிதியாக குடியாத்தம் நகை அடகு வியாபாரிகள் சங்கத்தினர் காவல்துறை அதிகாரிகளிடம் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.
நிகழ்ச்சியில் காவல்துறையினர், நகை அடகு வியாபாரிகள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X