என் மலர்
செய்திகள்

வடலூரில் மாணவன் மர்ம மரணம்- உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே உள்ள அயன் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் சங்கர் இவரது மகன் விடுதலை செல்வன் (வயது 14).
வடலூரில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தான் நேற்று விடுதலை செல்வன் வடலூர் தொழிற்பேட்டை அருகே உள்ள விவசாய கிணற்றில் பிணமாக மிதந்தான்.
தகவல் அறிந்த வடலூர் போலீசார் விரைந்து சென்று மாணவன் விடுதலை செல்வனின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றி அறிந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். அங்கு அரசு ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர் விடுதலை செல்வன் சாவில் மர்மம் உள்ளது.
எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சாலை மறியல் செய்தனர்.
இதனை அறிந்த நெய்வேலி துணை போலீஸ் சூப்பிரண்டு லோகநாதன் , குறிஞ்சிப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சியாம் சுந்தர் ஆகியோர் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். போராட்டம் செய்தவர்களை சமாதான படுத்தி அனுப்பி வைத்தனர்.
இன்று காலையும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மாணவன் விடுதலை செல்வனின் உடலை வாங்க மறுத்து திடீர் போராட்டம் செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் அவர்களுடன் சமரச பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.






