search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஜோலார்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் கொலை: மனைவி, மைத்துனர் கைது

    ஜோலார்பேட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் கொலையில் மனைவி, மைத்துனரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள்.

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அருகே சின்ன மூக்கனூர் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி இவரது மகன் ரமேஷ் (வயது43).டேங்க் ஆபரேட்டர். இவருக்கு நதியா(37). என்ற மனைவியும் பிரபாகரன்(19). நரசிம்மன்(12) என 2 மகன்கள் உள்ளனர்.

    இந்நிலையில் ரமேஷ் கடந்த 4-ந்தேதி தாமலேரிமுத்தூர் பாட்டாளி நகர் அருகே உள்ள டாஸ்மாக் கடையின் பின் புறத்தில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து டேங்க் ஆபரேட்டரை கொலை செய்த குற்றவாளிகளை தேடி வந்தனர். 

    இந்நிலையில் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல் வெளியானது இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:-

    குடிப்பழக்கத்திற்கு அடிமையான டேங்க் ஆபரேட்டர் ரமேஷ் வேலைக்கு செல்லாமல் ஊதாரியாக சுற்றி வந்துள்ளார். இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நதியாவின் சகோதரர் அரவிந்தன் (30). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் திருமணமானது.

    இந்நிலையில் ஒரு ஆண்டுக்கு முன் குடிபோதையில் இருந்த ரமேஷ் வீட்டில் தனியாக இருந்த அரவிந்தனின் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அரவிந்தனின் மனைவி அரவிந்தனை விட்டு பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனால் தனது வாழ்க்கையை வீணடித்த ரமேஷை பழிவாங்க அரவிந்தன் முடிவெடுத்தார். மேலும் ரமேஷின் நடவடிக்கையில் விரக்தியடைந்த நதியாவும் அரவிந்தனுடன் சேர்ந்து ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு சுமார் 9 மணியளவில் வீட்டிலிருந்த ரமேஷை அரவிந்தன் செல்போன் மூலம் குடிக்க அழைத்தார். அதை நம்பி அவரும் அங்குள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அப்போது இருவரும் குடித்தனர்.

    அதன்பின் அரவிந்தன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷின் தலையில் வெட்டி படுகொலை செய்தார். ஜோலார்பேட்டை போலீசார் இதுதொடர்பாக நதியா மற்றும் அரவிந்தன் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×