என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Brother-in-law"
- கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கீதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார்.
- இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமாள் கீதாவை தாக்கியதுடன் தாலி செயினை கழட்டி தரும்படி மிரட்டியதாக தெரிகிறது.
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் பூந்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சிவபெருமாள் (வயது 38). பிளம்பிங் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ராஜாமணி மகள் கீதா என்பவருக்கும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகி இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
வாக்குவாதம்
இந்த நிலையில் கணவன்-மனைவியிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில மாதங்களுக்கு முன்பு கீதா தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இவர்களை சேர்த்து வைக்க ஊர் பெரியவர்கள் பேச்சுவார்த்தை வந்துள்ளனர். இதனிடையே சிவபெருமாள் நேற்று தனது மனைவியை அழைத்து வர மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
ஆனால் கீதா அவருடன் செல்ல மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிவபெருமாள் கீதாவை தாக்கியதுடன் தாலி செயினை கழட்டி தரும் படி மிரட்டியதாக தெரிகிறது. இதனை கீதாவின் அண்ணனான சுயம்பு ராஜ் (44) கண்டித்துள்ளார். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு ஏற்பட்டுள்ளது.
கத்திக்குத்து
அப்போது சிவபெருமாள் தனது இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து சுயம்பு ராஜை குத்தியுள்ளார். இதனால் சுயம்பு ராஜின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் அவரின் கையில் சிவபெருமாள் கடித்ததாலும் காயம் ஏற்பட்டது. அப்போது வீட்டில் உள்ளவர்களும் வெளியிலிருந்து வந்த சிலரும் சத்தம் போட்டு உள்ளனர். இதனால் மேலும் ஆவேசம் அடைந்த சிவபெருமாள் ஊர் பிரமுகரான ஜெய் சிங் என்பவரையும் கத்தியால் தாக்கியுள்ளார்.
காயமடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே சிவபெருமாளும் போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது மனைவியின் அண்ணன்களான சுயம்பு ராஜ், ஜெயபால் ஆகியோர் தன்னை கத்தியால் தாக்கியதாகவும், இதில் காயமடைந்ததால் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவரது புகாரின் பேரிலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்