என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை விமான நிலையத்தில் உள்ள ஓட்டலில் ரூ.1 லட்சம் கொள்ளை
Byமாலை மலர்27 Jan 2020 10:26 AM GMT
சென்னை விமான நிலைய வளாகத்துக்கு அருகே உள்ள ஓட்டலில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆலந்தூர்:
சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இதன் நுழைவு வாயில் அருகே பிரபல ஓட்டல் உள்ளது.
நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இன்று காலை அவர்கள் ஓட்டலை திறந்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
மேலும் ஓட்டலில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களையும் திருடி சென்றிருந்தனர். ஓட்டலின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த கும்பல் பணம் மற்றும் பொருட்களை அள்ளி தப்பி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்களில் ஒருவன் உருவம் பதிவாகி உள்ளது.
முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டி உள்ளான். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை விமான நிலைய வளாகத்துக்குள் மெட்ரோ ரெயில் நிலையம் உள்ளது. இதன் நுழைவு வாயில் அருகே பிரபல ஓட்டல் உள்ளது.
நேற்று இரவு வியாபாரம் முடிந்ததும் ஓட்டலை ஊழியர்கள் பூட்டிச் சென்றனர். இன்று காலை அவர்கள் ஓட்டலை திறந்தபோது கல்லாப் பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரிந்தது.
மேலும் ஓட்டலில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களையும் திருடி சென்றிருந்தனர். ஓட்டலின் பின்பக்க கதவை உடைத்து புகுந்த கும்பல் பணம் மற்றும் பொருட்களை அள்ளி தப்பி இருப்பது தெரிந்தது.
இதுகுறித்து விமான நிலைய போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமிராவை ஆய்வு செய்தபோது அதில் கொள்ளையர்களில் ஒருவன் உருவம் பதிவாகி உள்ளது.
முகமூடி அணிந்து வந்து கைவரிசை காட்டி உள்ளான். இதனை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X