என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா ஆதனூரை சேர்ந்தவர் செந்தில்குமரன் (வயது 38). இவர் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் பொங்கல் விடுமுறைக்கு சொந்த ஊரான ஆதனூருக்கு வந்தார். நேற்று அருகில் உள்ள சாம்பலம் ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.
இதேபோல் கடினல்வயல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜான்சன் உடல்நலம் பாதிக்கப்பட்ட அவர் நேற்று வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து குடித்துவிட்டார். சிகிச்சைக்காக வேதாரண்யம் நாகை மற்றும் காரைக்கால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதேபோல் கோடியக்காடு காளியாபிள்ளை தெருவைச் சேர்ந்தவர் வீரபத்திரன் (80). இவர் தனது மகன் புண்ணியமூர்த்தி வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 24-ந் தேதி இவர் வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். இந்நிலையில் கோடியக்கரை பம்ப்ஹவுஸ் அருகே காட்டுப்பகுதியில் எலும்புக்கூடுகிடப்பதாக மீனவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரணை செய்ததில் மாயமான முதியவர் வீரபத்திரன் என அவரது உடையை வைத்து அடையாளம் கண்டனர். இது குறித்து வேதாரண்யம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்