என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை
Byமாலை மலர்16 Jan 2020 5:23 PM GMT (Updated: 16 Jan 2020 5:23 PM GMT)
வேலூரில் கள்ளக்காதல் தகராறில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.
வேலூர்:
வேலூர் கன்சால் பேட்டை ஆஞ்சநேயர் கோவில் தெருவை சேர்ந்தவர் பரத். (வயது 36) ஆட்டோ டிரைவர். வேலூர் சாரதி மாளிகை அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்ட் சங்க தலைவராக இருந்தார். இவரது மனைவி செல்வி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். வேலூர் சேண்பாக்கம் பர்மா காலனி பெரிய நகரை சேர்ந்த மைக்கேல் (வயது 27). இவருக்கு மக்கான் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்தது. அந்த பெண்ணின் மகளுடன் பரத்துக்கு தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக பரத் மைக்கேல் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பரத் புதியதாக வீடு கட்டி வந்தார். நேற்று காலை அவரது வீடு கிரகபிரவேசம் நடந்தது. சிறிது நேரம் கழித்து பரத் பெரியார் நகர் சென்றார்.
அப்போது அங்கிருந்த மைக்கேலுடன் தகராறு ஏற்பட்டது. இதில் கைகலப்பு ஏற்பட்டது. பின்னர் பரத் அங்கிருந்து சில அடி தூரம் நடந்து சென்றார். அவரை பின்தொடர்ந்து சென்ற மைக்கேல் இரும்பு கம்பியால் பரத்தின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் பரத் சரிந்து விழுந்தார். ஆனாலும் ஆத்திரம் தீராத மைக்கேல் தொடர்ந்து இரும்பு கம்பியால் தாக்கினார்.
இதனால் பரத் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குபதிவு செய்து மைக்கேலை கைது செய்தனர்.
கிரகப்பிரவேசம் முடிந்த அடுத்த சில மணி நேரத்தில் ஆட்டோ டிரைவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் வடக்கு போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 13-ந் தேதி ஆட்டோ டிரைவர் அய்யப்பன் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு ஆட்டோ டிரைவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர் சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X