என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேன் மோதி பேராசிரியை பலி: சிகிச்சை பலனின்றி கணவரும் உயிரிழப்பு
சித்தோடு:
பவானி லட்சுமி நகர் அருகே உள்ள வாசவி கல்லூரி கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடந்த சாலை விபத்தில் உதவி பேராசிரியை இறந்தார். மேலும் சிகிச்சை பலனின்றி கணவர் நேற்று இறந்தார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் கே.ஒ.என். தியேட்டர் பகுதியை சேர்ந் தவர் மெய்யரசு (வயது 29). தனியார் நிறுவன ஊழியர். இவருக்கும் பவானி, ஒரிச்சேரி பகுதியை சேர்ந்த தேவராஜ் மகள் சங்கீதா (26)வுக்கும் திருமணம் நடந்தது.
இவர் வெள்ளாளர் பார்மசி கல்லூரியல் உதவி பேராசிரியையாக பணி புரிந்தார். இருவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.
இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி காலை குமாரபாளையத்தில் இருந்து ஈரோடு செல்ல மெய்யரசு ஓட்டிச் சென்ற மொபட்டில் பின்னால் அமர்ந்து சங்கீதாவும் சென்று கொண்டு இருந்தார். சேலம்-கோவை நெடுஞ்சாலை பவானி, லட்சுமி நகர், வாசவி கல்லூரி அருகே சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக கோழி லோடு ஏற்றிக் கொண்டு வந்த ஈச்சர் வேன் மோதி மொபட் மீது மோதியது.
இதில் நிலை தடுமாறி விழுந்த சங்கீதா தலையில் பலத்த அடிப்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயத்துடன் மீட்கப்பட்ட மெய்யரசு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக சித்தோடு போலீஸ் இன்ஸ் பெக்டர் கதிர்வேல் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
திருமணமாகி ஒரே மாதத்தில் கணவன் மனைவி என இருவரும் விபத்தில் பலியான சம்பவம் 2 குடும்பத்தாரையும் மிகுந்த சோகத்தில் மூழ்கடித்து உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்