search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தந்தையை கொன்ற மகனுக்கு 5 ஆண்டு சிறை - அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

    அரியலூர் அருகே குடிக்க பணம் கேட்டு கொடுக்காத தந்தையை கொன்ற மகனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட் தீர்ப்பு வழங்கியது.
    அரியலூர்:

    அரியலூர் அருகே வாரணாசி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னையன் (வயது 65) . இவரது மகன் பொம்மன் (27). கடந்த 31-5-2017அன்று தனது தாயாரிடம் மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். அப்போது தந்தை சின்னையன் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொம்மன் அருகிலிருந்த உருட்டு கட்டையை எடுத்து தந்தை என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளார்.

    இதில் பலத்த காயமடைந்த சின்னையன் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 9-1-2017அன்று உயிரிழந்தார். இது குறித்து கீழப்பளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொம்மனை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூர் மாவட்டம் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. நேற்று நீதிபதி சுமதி தீர்ப்பு அளித்தார். அதில் பொம்மனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தார்.
    Next Story
    ×