search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 15 ரவுடிகள் கைது

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த 15 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாமூண்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிகள் 42 பேர் கடந்த மாதத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதையடுத்து காஞ்சிபுரம் டி.எஸ்.பி. கலைச்செல்வன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் 6 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டது.

    மேலும் 15 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சில குற்றவாளிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×