என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
அரசு பெண் ஊழியர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
ஈரோடு:
ஈரோடு முனிசிபல் காலனி வள்ளலார் வீதியை சேர்ந்தவர் தியாகராஜ் மனைவி தமிழ்மணி செல்வி(45). இவர் சித்தோடு ஆவின் நிறுவனத்தில் உள்ள ஆய்வகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடநத் 4ம் தேதி வீட்டை பூட்டி விட்டு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் உள்ள அவரது அம்மா வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் அன்று மதியம் தமிழ்மணி செல்வி வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ.25ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தமிழ்மணி செல்வி வீட்டின் அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தபோது, 2 மர்மநபர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த மர்மநபர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து ஈரோடு எஸ்பி சக்திகணேசன் கூறுகையில், ஆவின் நிறுவன ஊழியர் வீட்டில் கொள்ளை சம்பவத்தில் 2 மர்மநபர்கள் ஈடுபட்டு இருப்பது சிசிடிவி கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் 2 பேரும் பழங்குற்றவாளிகள் என சந்தேகிக்கிறோம். அதனால், கொள்ளையில் ஈடுபட்ட நபர்களும், அதற்கு உடந்தையாக மற்றும் 2பேர் என 4பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 4பேரும் விரைவில் பிடிபடுவார்கள், என்றார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்