என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
வேதாரண்யம் அருகே திருமணமான 7 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வாய்மேடு காவல் சரகம், மருதூர் தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் மினிமணி (வயது 25). இவர் வேதாரண்யம் அடுத்துள்ள நெய்விளக்கு கிராமத்தைச் சேர்ந்த தனது உறவுகாரரான ராஜா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ராஜா மருதூர் பகுதியில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் மின்மணி மூச்சு திணறல் ஏற்பட்டு கஷ்டப்பட்டு வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 7 மாதங்களே ஆகிறது.
இந்த நிலையில் மின்மணி உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட நிலையில் கடந்த 7.1.2020 அன்று வீட்டில் இருந்த விஷ மருந்தை எடுத்து சாப்பிட்டு விட்டார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் தீவிர சிகிச்சைக்காக நாகப்பட்டினம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் இறந்து விட்டார்.
மின்மணியின் தாயார் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தானமேரி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் திருமணமாகி 7 மாதங்களை ஆனதால் ஆர்.டி.ஓ மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்